சாம்சங் நிறுவனம் 432 மெகாபிக்சல் கேமரா சென்சார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால கைபேசி மாடல்களில் இந்த வகை கேமராக்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய கைப்பேசி மாடல்களில் 200 மெகாபிக்சல் அளவிலேயே கேமரா அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கிட்டத்தட்ட இரட்டிப்பு மடங்கு வளர்ச்சியில் கேமரா தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது. இவற்றின் வணிக ரீதியிலான உற்பத்தி 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு இது கைபேசிகளில் பொருத்தப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.