சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் ஆகியோர் பதவியேற்க உள்ளனர்.
தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய சட்டம் - ஒழுங்கு போலீஸ் டிஜிபியாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையின் புதிய காவல் ஆணையராக போலீஸ் அகாடமி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். இவர்கள் நியமனத்துக்கான அரசாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய போலீஸ் டிஜிபி.யாக சங்கர் ஜிவால் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். இன்று மாலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சைலேந்திரபாபுக்கு வழி அனுப்பு விழா நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரும் இன்று பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.