மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியிலுள்ள மண்டலம் 6, மதுரை மாநகராட்சியிலுள்ள மண்டலம் 3, பொள்ளாச்சி, புதுக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய பேரூராட்சிகளில் முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள், பாதுகாப்பு உறுதி செய்தல், தூய்மைப் பணிக்கான இயந்திரங்களை இயக்க திறன் பயிற்சி அளித்தல் ஆகியவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.