ஜெர்மனியைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான எஸ் ஏ பி லேப்ஸ், தனது இந்தியப் பிரிவில் பணியாற்றும் 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பெங்களூரு மற்றும் குர்கான் அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய முறையில், எஸ் ஏ பி நிறுவனம் நடத்தி வரும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, எஸ்ஏபி லேப்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது பணியாளர் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு மாறாக, தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் 10 முதல் 15 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு, உரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அவர்களின் பணி அனுபவத்திற்கு நிகரான சம்பள பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.