ஈரானின் தென்கிழக்கு தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் ரகசிய இராணுவ தளங்கள் சேதமடைந்துள்ளன.
ஈரான் இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தாக்குதலின் பாதிப்புகள் வெளிப்படையாகின. கடந்த காலங்களில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட பார்ச்சின் ராணுவ தளங்களில் தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதை பல வருடங்களாக மறுத்துவருகிறது. ஆனால் மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் 2003 ஆம் ஆண்டு வரை அங்கு சோதனைகள் நடந்ததாகக் கூறுகின்றன. கோஜிர் இராணுவ தளத்திலும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஈரான் அந்த தாக்குதல்களை முறையாக அறிவிக்கவில்லை. மேலும் அந்த தளங்களின் புகைப்படங்களும் வெளியாகவில்லை.