தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 6-ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை தொடர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.