மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 20 லட்சம் இந்தியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தட்டு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ளதாக சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறிவை பலதரப்பட்ட மக்களுக்கு வழங்குவதன் மூலம், பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வளர்ச்சி கிடைக்கும் என கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு மூலம், ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.