எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சவுதி அரேபியா நாடு, ஜூலை மாதம் முதல் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்கள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதே வேளையில், எண்ணெய் விலைகள் உயர்த்தப்படலாம் என கூறியுள்ளது. ஓபெக் கூட்டமைப்பு நாடுகளின் சந்திப்புக்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் இளவரசர் அப்துல்ஸீஸ் பின் சல்மான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது வரை, எண்ணெய் விலைகள் 10% வரை குறைந்துள்ளன. பேரல் ஒன்றுக்கு சராசரியாக 70 டாலர்கள் விலையில் கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. அதே வேளையில், உலகளாவிய முறையில் கச்சா எண்ணெய் தேவை குறையலாம் என்று கருதப்படுவதாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள ரெசெஷன் சூழலை எதிர்கொள்ள வேண்டியும், சவுதி அரேபியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.