சவுதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 21,971 பேர் சட்ட விரோதமாக குடியேறியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்குப் புகுந்து அகதிகளாக செல்கின்றனர். இதற்காக பெரும்பாலும் அவர்கள் சட்ட விரோத பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 21,971பேர் சட்ட விரோதமாக குடியேறியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பான்மையாக எத்தியோப்பியர்கள் உள்ளனர். மேலும், சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.