கச்சா எண்ணெய் உற்பத்தியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை குறைக்க உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் பீப்பாய் அளவு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அதிகரிக்க ஒபெக் நாடுகள் முயற்சித்தும் பலன் அளிக்காததால் சவுதி இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து சவுதி அரேபிய எரிசக்தி துறை அறிக்கை வெளியிட்டது. அதில் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் பீப்பாய் அளவு எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு வருகின்ற ஜனவரி மாதம் கூட்டமைப்பில் பிரேசில் நாடு இணைய உள்ளதாக கூறப்படுகிறது.