சவூதி அரேபியா ரஷ்யாவால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்காக 400 மில்லியன் டாலர் உதவியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து பேசுவதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது பேசிய முகமது பின் சல்மான், ரஷ்யா - உக்ரைன் இடையே சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த சவுதி தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபரிடம் ௯றினார் என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.