லெபனானை விட்டு வெளியேற சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2023

சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு லெபனான் எல்லைப் பகுதிகளை விட்டு வெளியேறவும், ஆயுத மோதல்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை லெபனானில் உள்ள சவுதி தூதரகம் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அரசு கடந்த ஆகஸ்ட் 1 அன்று, லெபனானுக்கான தனது பயண ஆலோசனையை வெளியிட்டிருந்தது. அதில் லெபனானின் தெற்கில் உள்ள பாலஸ்தீனிய முகாமான ஐன் எல்-ஹில்வேக்கு அருகில் அத்தியாவசியப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. முன்னதாக, கடந்த ஜூலை 29 […]

சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு லெபனான் எல்லைப் பகுதிகளை விட்டு வெளியேறவும், ஆயுத மோதல்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை லெபனானில் உள்ள சவுதி தூதரகம் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசு கடந்த ஆகஸ்ட் 1 அன்று, லெபனானுக்கான தனது பயண ஆலோசனையை வெளியிட்டிருந்தது. அதில் லெபனானின் தெற்கில் உள்ள பாலஸ்தீனிய முகாமான ஐன் எல்-ஹில்வேக்கு அருகில் அத்தியாவசியப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

முன்னதாக, கடந்த ஜூலை 29 அன்று முகாமில் முக்கிய பிரிவான ஃபத்தாவிற்கும் கடுமையான இஸ்லாமியவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் போராளிகள் ஆவர். இதன் காரணமாகவே சவுதி தன் மக்களை லெபனானை விட்டு விரைவாக வெளியேற வலியுறுத்துகிறது.

ஐன் எல்-ஹில்வே லெபனானில் உள்ள 12 பாலஸ்தீனிய முகாம்களில் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 80,000 முதல் 250,000 பாலஸ்தீனிய அகதிகள் உள்ளனர் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu