இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்திற்கு சவுதி அரேபியா ஆதரவளிக்க மறுத்துவிட்டது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்றது. இதில் அரபு நாடுகள் பங்கேற்றன. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானம் முன்மொழிக்கப்பட்டது. மத்திய கிழக்கு பகுதி வழியாக இஸ்ரேலுக்கு ராணுவ ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பது, அமெரிக்காவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்துவது, இஸ்ரேலுடன் அனைத்து விதமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்வது, இஸ்ரேலுடன் அனைத்து விதமான உறவுகளை துண்டிப்பது, நாடுகளின் வான்வெளியில் இஸ்ரேல் விமானங்கள் பறப்பதை தடுப்பது போர் நிறுத்தத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒரு குழுவை அனுப்புவது போன்ற ஐந்து நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம் போடப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு சவுதி அரேபியா ஆதரவளிக்க மறுத்துவிட்டது. இந்த தீர்மானத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, மொராக்கோ, பக்ரைன், சூடான், ஜோர்டான் மற்றும் ஜிபவுடி ஆகிய நாடுகளும் எதிர்த்தன.
இது மட்டுமல்லாமல் இஸ்ரேலிய ராணுவ படையை பயங்கரவாதிகள் அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்தது. இதனையும் சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த செயல் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு அளிப்பது போல் உள்ளதாக கூறப்படுகிறது.