பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன்களுக்கான (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஓராண்டு பருவகாலக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் 8.95 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கியின் வலைத்தளம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ இரண்டாவது முறையாக உயர்த்துவதைக் இது குறிக்கிறது.