கிரெடிட் சூயஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை அடுத்த 6 மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 மில்லியன் டாலர்கள் அளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடன் செலுத்த வேண்டி உள்ளது. இவற்றை தவணை முறையில் செலுத்தும் சலுகையை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு சாதகமானதாக உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடனை திருப்பி செலுத்துவதில் உறுதியாக உள்ளதாகவும், சொன்னபடியே கடன் தொகை முழுமையாக திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.