மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாமிற்கு நேரில் சென்று உயர் நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள், மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் நடந்து வருகிறது. இதுவரை 160 பேர் பலியாகி உள்ளனர். இந்த வன்முறை வீடியோக்கள் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும் அங்கு வன்முறை தொடர்வதால் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 800 வீரர்கள் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டனர்.
வன்முறை தொடர்பை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதற்காக உயர் நீதிமன்றம் முன்னாள் பெண் நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது. நீதிபதிகள் நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 11 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் காவல்துறை தலைவர் தத்தாத்ரே பட்சல்கிகரை இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.