நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தோல்வியடைந்தார்.
ஜெர்மனி, ஐரோப்பிய யூனியனில் அதிக மக்கள் தொகையும் மிகப்பெரிய பொருளாதாரமும் கொண்ட நாடாக உள்ளது. ஆனால், இந்நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், நவம்பரில் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் தனது நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்கினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதினால், ஆளுங்கட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 733 இடங்கள் கொண்ட பன்டேஸ்டாக் கீழ்சபையில் 207 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஸ்கால்ஸ் தோல்வியடைந்தார். 394 பேர் அவரது எதிராக வாக்களித்தனர். இதனால், 2025 பிப்ரவரி மாத இறுதியில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.