கனமழை காரணமாக தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடி,விருதுநகர்,தேனி, நீலகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.