நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று இரண்டு தாலுகாக்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்து உள்ளதும். ஆனால் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளிக்காற்று வீசுகிறது. இதுவரை இல்லாத அளவாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசி வருகிறது. இதனால் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளில் மேற் கூறைகள் காற்றில் தூக்கி வீசப்படுவது போன்று சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா ஆகிய இரண்டு தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.