திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் பள்ளியை திறக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அருகே நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.