கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு தாலுகாக்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் விடாமல் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாகவும் வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.