கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று எதிர்காலத்தில் ஏற்படும் என சீன விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.சீனாவை சேர்ந்த நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஜெங்லி, ‘பேட் உமன்’ என அழைக்கப்படுகிறார். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கொரோனா தொற்று பரவியதாக கருதப்படும் வூஹானில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்தில் இவர் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “கிட்டத்தட்ட 40 வகையான கொரோனா வைரஸ்கள் மனிதர்களை தாக்க உள்ளது; அவற்றில் கொரோனாவை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்களும் உள்ளன” என எச்சரித்துள்ளார்.