வைரஸைக் கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் நவீன முகக்கவசம் கண்டுபிடிப்பு

September 20, 2022

காற்றில் கலந்திருக்கும் வைரஸை கண்டுபிடித்து, அதைப் பற்றி குறுஞ்செய்தி மூலமாக அணிந்திருப்பவருக்கு எச்சரிக்கை செய்யும் நவீன முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழக ஆய்வில் இந்த நவீன முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகளின் உடலில் உள்ள தனித்துவமான புரதங்களை அடையாளம் காணக்கூடிய வகையில் இந்த முகக்கவசங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நவீன சென்சார் தொழில்நுட்பத்துடன், சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை அந்த முகக்கவசம் கண்டுபிடிக்கிறது. பல்வேறு நோய்க்கிருமிகளை அடையாளம் காணுவதற்காக அப்டேமர்கள் என்ற செயற்கை மூலக்கூறுகள் இந்த முக […]

காற்றில் கலந்திருக்கும் வைரஸை கண்டுபிடித்து, அதைப் பற்றி குறுஞ்செய்தி மூலமாக அணிந்திருப்பவருக்கு எச்சரிக்கை செய்யும் நவீன முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழக ஆய்வில் இந்த நவீன முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகளின் உடலில் உள்ள தனித்துவமான புரதங்களை அடையாளம் காணக்கூடிய வகையில் இந்த முகக்கவசங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நவீன சென்சார் தொழில்நுட்பத்துடன், சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை அந்த முகக்கவசம் கண்டுபிடிக்கிறது.

பல்வேறு நோய்க்கிருமிகளை அடையாளம் காணுவதற்காக அப்டேமர்கள் என்ற செயற்கை மூலக்கூறுகள் இந்த முக கவசத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ், எச்ஒன்என்ஒன் வைரஸ், சார்ஸ், கோவிட் போன்ற பல வைரஸ்களை இந்த முகக்கவசம் சரியாக அடையாளம் காண்கிறது. பின்னர், அடையாளம் காணப்பட்ட நோய்க்கிருமி குறித்து கைபேசிக்கு குறுந்தகவல் ஒன்றையும் இந்த முக கவசம் அனுப்புகிறது.

விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் நோய் தொற்றிலிருந்து எளிதாக வெளியேற முடியும் என்று நம்பப்படுகிறது. ஒருவர் இருக்கும் இடத்தில், காற்றில் கலந்திருக்கும் வைரஸ்களை இந்த முக கவசம் அடையாளம் காணுவதால், அவர் அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறும் நிலை உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நோய் தொற்று பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu