பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக 9 நிறுவனங்களுக்கு தடை விதித்த செபி

December 24, 2024

பங்கு சந்தையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டிய 9 நிறுவனங்களுக்கு செபி தடை விதித்துள்ளது. பிஎன்பி மெட்லைப் நிறுவனத்தின் பங்கு விற்பனை தொடர்பான ரகசிய தகவல்களை பயன்படுத்தி, இந்த நிறுவனங்கள் ‘ப்ரன்ட் ரன்னிங்’ என்ற முறையில் லாபம் ஈட்டியுள்ளன. இந்த முறைகேட்டில் 3 ஆண்டுகளில் ரூ.21.16 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். செபி நடத்திய விசாரணையில் இந்த மோசடி தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த நிறுவனங்களுக்கு பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்து, சட்டவிரோதமாக ஈட்டிய தொகையை பறிமுதல் செய்ய […]

பங்கு சந்தையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டிய 9 நிறுவனங்களுக்கு செபி தடை விதித்துள்ளது. பிஎன்பி மெட்லைப் நிறுவனத்தின் பங்கு விற்பனை தொடர்பான ரகசிய தகவல்களை பயன்படுத்தி, இந்த நிறுவனங்கள் ‘ப்ரன்ட் ரன்னிங்’ என்ற முறையில் லாபம் ஈட்டியுள்ளன. இந்த முறைகேட்டில் 3 ஆண்டுகளில் ரூ.21.16 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். செபி நடத்திய விசாரணையில் இந்த மோசடி தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த நிறுவனங்களுக்கு பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்து, சட்டவிரோதமாக ஈட்டிய தொகையை பறிமுதல் செய்ய செபி உத்தரவிட்டுள்ளது.

பிஎன்பி மெட்லைப் நிறுவனம், செபி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், பங்கு சந்தை முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu