அமெரிக்க பத்திரங்கள் ஆணையம், அதானி 21 நாட்களில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.
அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகள் பெற்றதாக அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
2021 ஜூலை மற்றும் 2022 பிப்ரவரி இடையிலான காலத்தில், ஒடிசா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக புகார் கூறப்படுகிறது. இதில், கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு காரணமாக அதானி குழுமம் 20% பங்குச் சரிவை சந்தித்தது. அமெரிக்க பத்திரங்கள் ஆணையம், அதானி 21 நாட்களில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. இல்லையெனில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.