சென்னையில் ஜூன் மாதம் 2025 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலக தமிழ் செம்மொழி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனை செயல் திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் மொழி மாநிலமெங்கும் சிறப்புடன் திகழ்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று ஆண்டுகளாக தாய்த்தமிழ் உயிர் போடும் வளர்போடும் வளர்த்தெடுப்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மேலும் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலக தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 நாட்கள் நடைபெறும் என மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.