பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது பதவிக்காலத்தில் பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகினார். மேலும், ரகசிய தகவல்களை கசியவிட்டதாக 'சிபர்' வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 30ஆம் தேதி 10 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பரிசு விற்பனை வழக்கில், இம்ரான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், ஜாமீன் கிடைத்த பிறகு, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இம்ரான் கானின் விடுதலைக்காக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதில், பல நகரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.