வஜிரிஸ்தான் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி வந்த 7 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் காவல்படை சுட்டுக் கொன்றது.
பாகிஸ்தானில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தலீபான்களின் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவுகின்றனர். இதனை கட்டுப்படுத்த ராணுவம் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், ராணுவம் அந்த பகுதியை நோக்கி விரைந்து சென்று, வஜிரிஸ்தான் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி வந்த 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது.