ஜபோர்ஜிய அணுமின் நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் ஜபோர்ஜிய அணுமின் நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அங்கு வெடி விபத்தை நிகழ்த்த ரஷியா தொழில்நுட்ப ரீதியில் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர், ரஷியாவின் அரசு அணுசக்தி நிறுவனமான 'ரோசாட்டாம்' மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.














