ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது இதில் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சே நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை சீத்தல் தேவி சிங்கப்பூர் வீராங்கனை அழின் நுர் உடன் போட்டியிட்டார். இதில் சிங்கப்பூர் வீராங்கனையை சீத்தல் தேவி 144 - 142 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். நேற்றைய ஆட்டம் முடிவில் இதுவரை இந்தியா 82 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2018ல் இந்தியா 15 தங்கம் 24 வெள்ளி 33 வெண்கலம் என அதிகபட்சமாக 72 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.














