தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2024 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் உள்ள 21 பிரிவுகளில் காலியாக உள்ள 3645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வுகளிலும் கட்டாயமாக தமிழ் மொழி தகுதி தாள் இடம்பெறும். தேர்வுகளை நெறிப்படுத்தி வலுவான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வுகள் ஒளிவு மறைவு அற்ற வகையில் நடத்தி முடிக்க மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது