இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று, பங்குச்சந்தையில் பெரிய மாற்றங்கள் பதிவாகவில்லை. ஆனால், இன்றைய தினம் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தின் இடையில் 390 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 273.67 புள்ளிகள் உயர்ந்து, 65617.84 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 83.5 புள்ளிகள் உயர்ந்து 19439.4 புள்ளிகளாகவும் நிலை பெற்றுள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, சன் பார்மா, ஈச்சர் மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல், டாடா கன்சியூமர், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன.