புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரலுமான பாலி நாரிமன் இன்று காலமானார்.
புகழ்பெற்ற சட்டவியல் அறிஞர் பாலி நாரிமன் தனது 70 ஆண்டு பயணத்தில் சுமார் 50 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.இவர் போபால் விஷவாயு, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார். மேலும் இவருக்கு 1991 ஆம் ஆண்டு பத்மபூஷன், 2007 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் இவர் சட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள் பல தலைமுறைகளுக்கும் நினைவு கூறப்படும் என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.