மூத்தோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டமானது மருமகளுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த காயத்ரி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருமணத்துக்கு பிறகு என்னுடைய கணவர் சுப்பிரமணியனும், அவரது தந்தை அம்பிகாபதியும் எனக்கு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தனர். அதை மறைத்து எனக்கு எதிராக மாமானாரும், மாமியாரும் சேர்ந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவை விசாரித்த முதியோர் பாதுகாப்பு அலுவலர், என்னை வீட்டை விட்டு காவல் துறை உதவியுடன் வெளியேற்றினார். வீட்டை மாமனார், மாமியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ன் படி மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ, வாரிசோ கிடையாது. அதனால் இந்தச் சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. எனவே, மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.