பாகிஸ்தான் - இம்ரான் கான் மீது தேச துரோக வழக்கு தாக்கல் செய்தவர் சுட்டுக்கொலை

June 7, 2023

பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர் அப்துல் ரசாக் ஷார், இம்ரான் கான் மீது தேச துரோக வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர், அவர் மீது சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், வழக்கறிஞரின் மரணத்திற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில், குவட்டா விமான நிலைய சாலையில் […]

பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர் அப்துல் ரசாக் ஷார், இம்ரான் கான் மீது தேச துரோக வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர், அவர் மீது சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், வழக்கறிஞரின் மரணத்திற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில், குவட்டா விமான நிலைய சாலையில் உள்ள நீதிமன்றம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, அப்துல் ரசாக் உடனடியாக குவட்டா சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய குவட்டா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஆயிஷா ரியாஸ், "அப்துல் ரசாக் ஷார் மீது மிகக் கொடிய தாக்குதல் நடந்துள்ளது. அவர் உடலில் 16 குண்டுகள் பாய்ந்துள்ளன. குறிப்பாக, கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்துள்ளன" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu