இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டிலும் உயர்வு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை, சென்செக்ஸ் 80,501.99 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று, அந்த இண்டெக்ஸ் சுமார் 160 புள்ளிகள் உயர்ந்து 80,661.62 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சம் 81,049.03 புள்ளிகள், குறைந்தபட்சம் 80,657.71 புள்ளிகள் வரை சந்தை நிலை பெற்றது. இறுதியில் 294.85 புள்ளிகள் உயர்ந்து, சென்செக்ஸ் 80,796.84 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி கடந்த வெள்ளிக்கிழமை 24,346.70 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று, நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 24,419.50 புள்ளிகளில் தொடங்கியது. அதன் அதிகபட்சம் 24,526.40 புள்ளிகளுக்கும் குறைந்தபட்சம் 24,400.65 புள்ளிகளுக்கும் இடையே வர்த்தகம் நடந்தது. இறுதியில் 114.45 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 24,461.15 புள்ளிகளில் நிறைவடைந்தது.