கடந்த இரு தினங்களாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு எண் இரண்டே நாட்களில் 900 புள்ளிகளை இழந்துள்ளது. கரடியின் ஆதிக்கத்திற்கும் காளையின் வீழ்ச்சிக்கும் பல முக்கிய காரணங்களை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முதலாவதாக, அமெரிக்க பங்குச் சந்தையின் பலவீனம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரொக்கப்பண இருப்பு குறைந்து வருவதாக வெளியான செய்தியின் எதிரொலி, இந்திய பங்குச் சந்தையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவதாக, டாலர் - ரூபாய் இடையிலான வித்தியாசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, தொழில்நுட்பம் மற்றும் வங்கி துறையில் ஏற்பட்டுள்ள சந்தை இழப்பு கூறப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்திய வங்கிகள் பலவும் பங்குச்சந்தையில் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, இதர காரணங்கள் பல கூறப்பட்டுள்ளன.