இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் பதிவாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் பதிவாகின்றன. அந்த வகையில், இன்று, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 79243.18 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 24044.5 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 79000 புள்ளிகளை தாண்டியும், நிஃப்டி 24000 புள்ளிகளை தாண்டியும் உச்சம் பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், இந்தியா சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, வோடபோன், இண்டஸ் டவர்ஸ், ஜி எம் ஆர் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கி, அதானி பவர், அமரராஜா பேட்டரி, ரேமண்ட், எஸ் வங்கி, ஜீ என்டர்டெயின்மென்ட், பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை சரிவடைந்துள்ளன.