பங்குச் சந்தையில் எழுச்சி - சென்செக்ஸ் 466 புள்ளிகள் உயர்வு

June 16, 2023

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 466.95 புள்ளிகள் உயர்ந்து 63384.58 புள்ளிகள் ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 137.9 புள்ளிகள் உயர்ந்து 118826 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, பின்னர் வேகமாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, […]

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 466.95 புள்ளிகள் உயர்ந்து 63384.58 புள்ளிகள் ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 137.9 புள்ளிகள் உயர்ந்து 118826 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, பின்னர் வேகமாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் நிலவிய சாதகமான சூழல், வங்கித்துறை, நிதித்துறை மற்றும் எஃப் எம் சி ஜி துறை ஆகியவற்றில் காணப்படும் ஏற்றம் ஆகியவற்றால் பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, வங்கித் துறை மற்றும் உற்பத்தி தொழில் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளில் சரிவு காணப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu