பங்குச்சந்தை ஏற்றத்துக்கு முடிவு - சென்செக்ஸ் 170 புள்ளிகள் வீழ்ச்சி

December 29, 2023

இந்த வாரத்தின் தொடக்கம் முதலே இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வந்தது. இதற்கு இன்று முடிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் இறக்கத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை, இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 170.12 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 72240.26 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 47.3 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 21731.4 புள்ளிகளில் […]

இந்த வாரத்தின் தொடக்கம் முதலே இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வந்தது. இதற்கு இன்று முடிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் இறக்கத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை, இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 170.12 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 72240.26 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 47.3 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 21731.4 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், டாடா கன்ஸ்யூமர், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசஸ், ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வாங்கி, மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பிபிசியில், ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், சிப்லா, டைட்டன், என்டிபிசி, ஐடிசி, பவர் கிரிட், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை சரிந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu