பங்குச் சந்தையில் கடும் சரிவு - சென்செக்ஸ் 671 புள்ளிகள் வீழ்ச்சி

March 10, 2023

இந்திய பங்குச் சந்தையில், கடந்த 2 நாட்களாக கடும் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 671.15 புள்ளிகள் சரிந்து 59135.13 ஆக நிலை பெற்றது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 176.7 புள்ளிகள் சரிந்து 17412.9 புள்ளிகளில் நிலை பெற்றது. குறிப்பாக, வங்கித் துறை சார்ந்த நிறுவனங்கள் இன்று கடும் இழப்பை பதிவு செய்தன. தேசிய பங்குச் சந்தையில், வங்கித் […]

இந்திய பங்குச் சந்தையில், கடந்த 2 நாட்களாக கடும் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 671.15 புள்ளிகள் சரிந்து 59135.13 ஆக நிலை பெற்றது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 176.7 புள்ளிகள் சரிந்து 17412.9 புள்ளிகளில் நிலை பெற்றது. குறிப்பாக, வங்கித் துறை சார்ந்த நிறுவனங்கள் இன்று கடும் இழப்பை பதிவு செய்தன.

தேசிய பங்குச் சந்தையில், வங்கித் துறை வர்த்தக குறியீடு 2% சரிந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் 1.85% சரிவு பதிவு செய்யப்பட்டது. வங்கித் துறை சார்ந்த 12 பட்டியல் நிறுவனங்களில் 11 நிறுவனங்கள் இழப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து 2 நாட்களாக சரிந்து வருகின்றன..

இன்றைய வர்த்தகத்தில் லாபத்தை ஈட்டிய நிறுவனங்களாக டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, மாருதி சுசுகி, பிரிட்டானியா ஆகியவை உள்ளன. சில தினங்களுக்கு முன்னால் உயரத் தொடங்கிய அதானி குழும பங்கு மதிப்பு மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. இன்று, அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு 1896.2 ஆக உள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாளில் மட்டுமே, அதானி குழுமத்திற்கு 2.92% சரிவு பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu