இந்திய பங்குச் சந்தை பெரிய மாற்றங்கள் இன்றி நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 52.63 புள்ளிகள் இறக்கத்துடனும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 27.05 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை 73953.31 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 22529.05 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், சிப்லா, ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், நெஸ்லே, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, ஐ சி ஐ சி ஐ வங்கி, டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ் இன்ட் வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.