புதிய உச்சத்தில் பங்குச்சந்தை - 19100 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி

June 30, 2023

கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் பெற்று வரும் இந்திய பங்குச்சந்தை, இன்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண்கள், வரலாற்று உச்ச புள்ளிகளை பதிவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 803.14 புள்ளிகள் உயர்ந்து 64718.56 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், நிஃப்டி 216.95 புள்ளிகள் உயர்ந்து 19189.05 புள்ளிகளாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, 19100 புள்ளிகளைக் கடந்து […]

கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் பெற்று வரும் இந்திய பங்குச்சந்தை, இன்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண்கள், வரலாற்று உச்ச புள்ளிகளை பதிவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 803.14 புள்ளிகள் உயர்ந்து 64718.56 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், நிஃப்டி 216.95 புள்ளிகள் உயர்ந்து 19189.05 புள்ளிகளாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, 19100 புள்ளிகளைக் கடந்து நிஃப்டி குறியீட்டு எண் பதிவாகியுள்ளது

பெரும்பாலான பங்குகள் இன்று ஏற்றம் அடைந்துள்ளன. குறிப்பாக, மஹிந்திரா, இன்ஃபோசிஸ், இண்டஸ் இண்ட் வங்கி, சன் பார்மா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஆட்டோ, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஐ டி சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu