தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தை

May 30, 2024

இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து 4வது நாளாக வீழ்ச்சி பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 617.3 புள்ளிகள் சரிந்து 73885.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 216.05 புள்ளிகள் சரிந்து 22488.65 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், வங்கித் துறை பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன. எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத […]

இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து 4வது நாளாக வீழ்ச்சி பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 617.3 புள்ளிகள் சரிந்து 73885.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 216.05 புள்ளிகள் சரிந்து 22488.65 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், வங்கித் துறை பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன. எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பவர் கிரிட், டைட்டன், விப்ரோ, ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஐடிசி, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu