இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாற்று உச்சம் பதிவாகி உள்ளது. முதல் முறையாக, 75000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் நிலை கொண்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 75038.15 புள்ளிகளிலும், நிஃப்டி 22753.8 புள்ளிகளிலும் உள்ளன. இது முந்தைய வர்த்தக நாளை விட 0.48% அதிகமாகும்.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, கோல் இந்தியா, பிபிசிஎல், கோட்டக் வங்கி, ஐடிசி, ஹிண்டால்கோ, ஏர்டெல், பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், எச்டிஎஃப்சி லைஃப், சிப்லா, டேவிஸ் லேப்ஸ், மாருதி சுசுகி, ஸ்ரீராம் பைனான்ஸ், எல் அண்ட் டி, எச்டிஎப்சி வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.