சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை - சென்செக்ஸ் 490 புள்ளிகள் உயர்வு

January 4, 2024

2024 தொடக்கம் முதல் சரிந்து வந்த பங்குச்சந்தை, இன்று ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 490.97 புள்ளிகள் உயர்ந்து 71847.57 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 141.25 புள்ளிகள் உயர்ந்து 21658.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பஜாஜ் பைனான்ஸ், டாடா கன்சியூமர், என்டிபிசி, ஓஎன்ஜிசி, இன்டஸ் இன்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ […]

2024 தொடக்கம் முதல் சரிந்து வந்த பங்குச்சந்தை, இன்று ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 490.97 புள்ளிகள் உயர்ந்து 71847.57 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 141.25 புள்ளிகள் உயர்ந்து 21658.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பஜாஜ் பைனான்ஸ், டாடா கன்சியூமர், என்டிபிசி, ஓஎன்ஜிசி, இன்டஸ் இன்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பிபிசிஎல், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, டாக்டர் ரெட்டீஸ், ஹெச் சி எல் டெக், ஹீரோ மோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, டிசிஎஸ் ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu