இந்தியாவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளான இன்று இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 612.21 புள்ளிகள் உயர்ந்து, 71752.1 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 203.61 புள்ளிகள் உயர்ந்து, 21725.7 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாக்டர் ரெட்டீஸ், ஈச்சர் மோட்டார்ஸ், சன் ஃபார்மா, டேவிஸ் லேப்ஸ், டாடா மோட்டார்ஸ், சிப்லா, மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோல் இந்தியா, ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக் வங்கி போன்ற அநேக நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், எல் அண்ட் டி, டைட்டன், டாடா கன்சியூமர், பி பி சி எல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.