தொடர்ந்து 3 அமர்வுகளாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தையில், இன்று ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 275.62 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 89.41 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இறுதியில், சென்செக்ஸ் 65930.77 ஆகவும், நிஃப்டி 19783.4 ஆகவும் நிலை பெற்றுள்ளது.இன்றைய வர்த்தகத்தில், எஸ்பிஐ லைஃப், எச்டிஎஃப்சி லைஃப், அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், டைட்டன், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஆகிய முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, பிபிசிஎல், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, என் டி பி சி, பவர் கிரிட், பாரத ஸ்டேட் வங்கி, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன.