இன்றைய வர்த்தக நாளில் ஏற்ற இறக்கங்கள் இன்றி தொடங்கிய பங்குச் சந்தை, இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 390.02 புள்ளிகள் உயர்ந்து, 61045.74 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 112.05 புள்ளிகள் உயர்ந்து, 18165.35 புள்ளிகளில் நிலை கொண்டது.
சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான போக்கு மற்றும் உலோகத் துறையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் நடுவில் 500 புள்ளிகள் வரை சரிந்தாலும், இறுதியில் லாபத்துடன் சந்தை நிறைவடைந்தது. குறிப்பாக, டாடா ஸ்டீல், விப்ரோ, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.