கடந்த 1979-ல் தொடங்கப்பட்ட சென்செக்ஸ் இன்று 85,000 புள்ளிகளை கடந்துள்ளது. இது 45 ஆண்டுகளில் 850 மடங்கு வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சி தொடரும் என பல நிபுணர்கள் கணிக்கின்றனர். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தளர்வான கொள்கைகள் மற்றும் இந்தியாவின் வலுவான பொருளாதாரம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். குறிப்பாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்செக்ஸ் 2025-ம் ஆண்டுக்குள் 100,000 புள்ளிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் ஏராளமான பணப்புழக்கம் இருப்பதால், சென்செக்ஸ் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.